கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜா பாட்டி கைவைத்தியம்...திரி

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
பாட்டி சொன்ன வைத்தியம்



இந்த அவசர வாழ்க்கையில் நம்மில் பலர் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் பல தொல்லைகளுக்கு ஆளாகி நம் உடல்நலம் கெடுவதுடன், மருத்துவமனையே கதி என்று தொடர்கதையாய் முற்றுகை இட நேரும் அவல நிலைதான் கடைசியில்..



சற்றே சிந்தித்துப் பார்த்தால், வருமுன் காப்பது சாலச் சிறந்தது என்று நமக்கே புரியும்.



நம் வீட்டுப் பெரியவர்கள், எத்தனையோ கைவைத்தியம் நமக்குச் சொல்லி இருப்பார்கள். காலப்போக்கில் எல்லாவற்றையும் மறுந்து விட்ட நமக்கு, இங்கே மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்தி நம் உடல் நலம் பேண ‘பாட்டி சொன்ன வைத்தியம்’ வருகிறது.



பாட்டி சொல்லைத் தட்டக் கூடாது மக்களே.. கேட்கத் தயாராகுங்கள்..



கைவைத்தியம் 1



வயிற்றுப் பொருமலா? இல்லை வயிற்றுப் போக்கா?



பிள்ளைங்களா, இதோ உங்களுக்கான உடனடித் தீர்வாய் பாட்டியின் கைவைத்தியம்..



சிறிதளவு காய்ந்த சுக்கைப் பொடித்துக் கொள்ளுங்கள். சுக்கு பொடிக்க கஷ்டமாக இருக்கிறதா? கடைகளில் ரெடிமேடாக சுக்குப்பொடியும் உங்களுக்குக் கிடைக்கும் பாருங்கள்.



ஒரு டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடியைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். சூடான ஒரு கைப்பிடி அளவு சாதத்தையும் தனியாக எடுத்து வையுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு, அதில் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையைப் போடுங்கள். சிறிதளவு பெருங்காயத்தைப் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடியைப் போட்டுவிட்டு, கையோடு, நாம் எடுத்துவைத்திருந்த சாதத்தையும் போட்டு, ஒரு பிரட்டுப் பிரட்டிவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்..



அவ்வளவுதான்… சூடாக இந்த சுக்குப்பொடி சாதத்தை உண்ணுங்கள்.. தொடர்ந்து இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ளவும்.. இரண்டு மூன்று நாட்களில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..



சின்ன கைவைத்தியம்தான்.. வாரத்தில் ஒருநாள் யார் வேண்டுமானாலும், இதை எடுத்துக்கொள்ளலாம்..



முயன்று பாருங்கள்.. பலன் நிச்சயம்.



பாட்டி சொல்லைத் தட்டாதீங்க..




 
Last edited by a moderator:

lathasridharss

Moderator
Staff member
சரோஜா பாட்டி கைவைத்தியம் 2



ஹீமோகுளோபின் என்கிற செந்நிற இரத்த அணுக்கள் சிலருக்கு, குறிப்பாக சில பெண்களுக்குக் குறைவாக இருக்கும்.. அதனால் முகம் வெளுத்து சோபை இழந்து அவர்கள் காணப்படுவார்கள்.



கவலைப்படாதீங்க..



இனி முருங்கைக்கீரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளப்பாருங்க. முடிந்தவரை, பொறியலோ, அல்லது கூட்டோ, இல்லை முருங்கையிலையும், பூவும் போட்டு செய்த சூப்போ, ஏதோ ஒரு வகையில் வாரம் இரண்டு முறையாவது உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளுங்கள்.



அது எதுவும் பிடிக்கலையா, இருக்கவே இருக்கு, வெறும் நெய்யில் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையைப் போட்டு வதக்கிச் சாப்பிடலாம். உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும், நம் வீட்டில் வெண்ணையை உறுக்கி நெய்யாய்க் காய்ச்சும் பொழுது, வாசனைக்காக கடைசியில் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையைப் போட்டு, படபடவென வெடிக்கவிட்டு, அப்படியே அதை எடுத்து சிறு பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்போம். சூப்பரா டேஸ்ட் இருக்கும்.. இரும்பு சத்து பிள்ளைங்களுக்கு நல்லா உடம்பில் சேரத்தான் அப்படி செய்வாங்க பெரியவங்க..



அப்படியே, அத்திப்பழம் கிடைத்தால் தினம் இரண்டு அல்லது மூன்றாவது உட்கொள்ளுங்கள். உடனடி சட்டென பலன் கிடைக்கும். காய்ந்த அத்திப்பழமும் (ஃபிக்) நல்லதுதான். தினமும் 3 அல்லது 4 உலர் அத்திப்பழம் சாப்பிடுதலும் நிச்சயம் நலம் உண்டாக்கும்.



கூடவே நான்கு பேரீச்சம்பழத்தையும் (டேட்ஸ்) எடுத்துக்கோங்க.. சில குழந்தைகள் பேரீச்சையைக் கண்டாலே அலறி ஓடுவாங்க.. அந்த மாதிரி பிள்ளைங்களுக்கு பேரீச்சையை பாலில் ஊற வைத்தும் கொடுக்கலாம். இப்போதெல்லாம் கடைகளில் டேட்ஸ் சிரப்பும் கிடைக்கிறது. நாம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நட்ஸ், உலர் கொட்டை வகைகள் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தி விட்டால், அதுவே அவர்களுக்குப் பழகி பின்நாளில் நன்மையைக் கொடுக்கும்.



நேந்திரம் பழத்தை வேகவைத்து நாளொன்றுக்கு ஒரு அரைப்பழமாவது எடுத்துக்கொண்டாலும், சிவப்பு இரத்த அணுக்கள் அளவு உடனடியாக அதிகரிக்கும்.



உங்க உணவில் இரும்பு சத்துக்காக வெல்லம் அதிக அளவு எடுத்துக்க பாருங்க..



இந்த பாட்டி சொல்லைத் தட்ட மாட்டீங்க தானே!!.. செஞ்சுதான் பாருங்களேன்.. கைமேல் பலனும் கிட்டும். ஹீமோகுளோபின் கவுண்ட்டும் சும்மா ஜிவ்வுன்னு ஏறிடும் பாருங்க..



மீண்டும் உங்களுக்கு கைவைத்தியக் குறிப்புகள் சொல்ல வருவேன்.. சரோஜா பாட்டிக்காகக் காத்திருங்க பிள்ளைங்களா..



சரோஜா பாட்டி கைவைத்தியம் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.. நேரம் கிடைச்சா, கமெண்ட்ஸும் போடுங்க..



 
Last edited:

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 3



பல்வலி வந்தால் எப்பேர்பட்டவர்களாலும் சமாளிக்க முடியாது.. உயிர் போய்விடும் வலியை அனுபவிப்போம்.. இன்றைக்கு நான் பல்வலிக்கு சில தீர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். உங்களுக்கு இதில் எது சரிபட்டு வருமோ, அதை செய்து பாருங்கள்..


** ஒன்றோ இரண்டோ கிராம்புகளை பல்வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்தபடி அந்த உமிழ்நீரை முழுங்குங்கள்.. பல்வலி இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போயிருக்கும்.


** தொடர் பல்வலிக்கு, ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் கல்லு உப்பை ஒரு தேக்கரண்டி கரைத்து, அதை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்துத் துப்புங்கள். சிறிது நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் பலன் இருக்கும்.



** சுக்குத்துண்டை வாயில் போட்டுக்கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கும்.


** துளசி இலை இரண்டு மூன்று, கொஞ்சம் உப்பு, மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்துப் பாருங்கள்.. நல்ல பல்வலி நிவாரணி இதுவும்..


** சுத்தமான தேனை விரலில் எடுத்து தினம்தோறும் ஈறுகளைத் தேய்த்து வந்தாலும், ஈறுகளின் வீக்கம் குறையும்.


** கடுக்காய் பொடியை வலிக்கும் பற்களின் ஈறுகளின் மேல் சிறிது தடவி, கொஞ்சம் நேரம் கழித்து வாயைக் கொப்பளிங்கள்..முதலில், மரத்துப் போனால் போல் இருந்தாலும், நல்ல பலனைக்கொடுக்கும். இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்பு கடுக்காய்ப் பொடியை சுடுதண்ணீரில் கலக்கிக் குடிக்கவும் செய்யலாம்.






 
Last edited:

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 4



இன்னிக்கு நம்ம எல்லார் வீட்டிலும் அஞ்ஞனப் பெட்டியில் எப்பவும் கைவசமிருக்கும் வெந்தயத்தைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்லப் போறேன்..



சூட்டைத் தணிக்கும் இந்த வெந்தயம், எத்தனையோ விதத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது.



** வெந்தயத்தைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் லேசாக வறுத்து அதை நன்றாக மிக்சியில் பொடி செய்து கைவசம் எப்பவும் வைத்துக் கொள்ளுங்கள்.. திடீரென்று வரும் சூட்டு வயிற்றுவலிக்கு, இந்த வெந்தயப் பொடியை மோரில் கலக்கிக் குடித்தால் நிச்சயம் வலி நிவாரணம் கிடைக்கும். கையில் வெந்தயப்பொடி இல்லையென்றாலும், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டுக்கொண்டு, மோரைக் குடிக்கலாம். நிச்சயம் சூட்டு வயிற்று வலி மட்டுப்படும்.



** அஜீரண வயிற்று வலியாய் இருந்தால், இதே வெந்தயப் பொடியுடன் சிறிதளவு பெருங்காயத்தையும் சேர்த்து மோரில் கலக்கிக் குடிக்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.



** நீரழிவு எங்கிற டயாப்படீஸ் நோய்க்கு, வெந்தயம் ஒரு நல்ல கைமருந்து என்றே சொல்லலாம்.


உங்களில் நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் வெந்தயப்பொடியைக் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது, இல்லையென்றால் ஊற வைத்த வெந்தயத்தையும், அந்த தண்ணீரையும் காலையில் எழுந்தவுடன் எடுத்துக்கொள்வது என்பது..



இது எல்லாவற்றையும் விட, வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாள்பட்ட டயாபட்டீஸ் கூட கன்ட்ரோலில் வரும். சுகர் லெவல் குறையும்.. இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்..



ஒரு கப் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு இரவு நன்றாக அந்த வெந்தயத்தை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் நன்றாக அந்த வெந்தயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள்.. அந்த வடிகட்டிய நீரை வீணாக்காமல் நீங்கள் பருகவும் செய்யலாம்.



அப்படி வடிகட்டிய வெந்தயத்தை ஒரு வடி தட்டில் போட்டு, நன்றாக மூடி வைத்து அப்படியே முலை கட்ட விடுங்கள்.. ஒரு நாள் கழித்து பார்த்தால் நன்றாகவே முலை விட்டிருக்கும். ஈரப்பதம் இல்லாமல் முலைகட்டிய வெந்தயம் நன்கு உலர்ந்து இருக்கும். நன்றாக முலை கட்டும் வரை விட்டு வையுங்கள்.



இந்த முலை கட்டிய வெந்தயத்தை ஒரு டப்பாவில் போட்டு அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்..



தினமும் காலை பலகாரத்திற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளலாம்.. அதே முறைதான் மதியமும், இரவு உணவுக்கு முன்பும்..



இப்படி எடுத்துக் கொள்வது நிச்சயம் சுகர் லெவலை குறைத்து நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது..



ஆனால், ஏற்கனவே நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டு வந்தாலும், அதை உடனடியாக எல்லாம் நிறுத்தி விட வேண்டாம்.. இதையும் செய்து கொண்டு, உங்களுக்குக் கொடுத்த மருந்தையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.



வாரம் ஒருமுறை உங்கள் சுகர் லெவலையும் சரிபார்த்துக் கொண்டே இருங்கள்.. உங்கள் சுகர் லெவல் மட்டுப்படத் துவங்கிய பின், மருத்துவ ஆலோசனை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்..



இன்னும் வெந்தயத்தைப் பற்றி நிறைய சொல்ல இருக்கு.. அதையெல்லாம் அடுத்த எபியில் சொல்லறேன் பிள்ளைங்களா…



இனி செவ்வாய் அன்று உங்களை மீண்டும் சந்திக்கிறேன்..




மறக்காமல் ஒரு லைக்கோ, கமெண்ட்சோ போடுங்கப்பா…

 

lathasridharss

Moderator
Staff member
கை வைத்தியம் 4



இன்னிக்கு நம்ம எல்லார் வீட்டிலும் அஞ்ஞனப் பெட்டியில் எப்பவும் கைவசமிருக்கும் வெந்தயத்தைப் பற்றி சில குறிப்புகளைச் சொல்லப் போறேன்..



சூட்டைத் தணிக்கும் இந்த வெந்தயம், எத்தனையோ விதத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுகிறது.



** வெந்தயத்தைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் லேசாக வறுத்து அதை நன்றாக மிக்சியில் பொடி செய்து கைவசம் எப்பவும் வைத்துக் கொள்ளுங்கள்.. திடீரென்று வரும் சூட்டு வயிற்றுவலிக்கு, இந்த வெந்தயப் பொடியை மோரில் கலக்கிக் குடித்தால் நிச்சயம் வலி நிவாரணம் கிடைக்கும். கையில் வெந்தயப்பொடி இல்லையென்றாலும், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டுக்கொண்டு, மோரைக் குடிக்கலாம். நிச்சயம் சூட்டு வயிற்று வலி மட்டுப்படும்.



** அஜீரண வயிற்று வலியாய் இருந்தால், இதே வெந்தயப் பொடியுடன் சிறிதளவு பெருங்காயத்தையும் சேர்த்து மோரில் கலக்கிக் குடிக்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.



** நீரழிவு எங்கிற டயாப்படீஸ் நோய்க்கு, வெந்தயம் ஒரு நல்ல கைமருந்து என்றே சொல்லலாம்.


உங்களில் நிறைய பேருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் வெந்தயப்பொடியைக் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது, இல்லையென்றால் ஊற வைத்த வெந்தயத்தையும், அந்த தண்ணீரையும் காலையில் எழுந்தவுடன் எடுத்துக்கொள்வது என்பது..



இது எல்லாவற்றையும் விட, வெந்தயத்தை இப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாள்பட்ட டயாபட்டீஸ் கூட கன்ட்ரோலில் வரும். சுகர் லெவல் குறையும்.. இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்..



ஒரு கப் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு இரவு நன்றாக அந்த வெந்தயத்தை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் நன்றாக அந்த வெந்தயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள்.. அந்த வடிகட்டிய நீரை வீணாக்காமல் நீங்கள் பருகவும் செய்யலாம்.



அப்படி வடிகட்டிய வெந்தயத்தை ஒரு வடி தட்டில் போட்டு, நன்றாக மூடி வைத்து அப்படியே முலை கட்ட விடுங்கள்.. ஒரு நாள் கழித்து பார்த்தால் நன்றாகவே முலை விட்டிருக்கும். ஈரப்பதம் இல்லாமல் முலைகட்டிய வெந்தயம் நன்கு உலர்ந்து இருக்கும். நன்றாக முலை கட்டும் வரை விட்டு வையுங்கள்.



இந்த முலை கட்டிய வெந்தயத்தை ஒரு டப்பாவில் போட்டு அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்..



தினமும் காலை பலகாரத்திற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளலாம்.. அதே முறைதான் மதியமும், இரவு உணவுக்கு முன்பும்..



இப்படி எடுத்துக் கொள்வது நிச்சயம் சுகர் லெவலை குறைத்து நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது..



ஆனால், ஏற்கனவே நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டு வந்தாலும், அதை உடனடியாக எல்லாம் நிறுத்தி விட வேண்டாம்.. இதையும் செய்து கொண்டு, உங்களுக்குக் கொடுத்த மருந்தையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.



வாரம் ஒருமுறை உங்கள் சுகர் லெவலையும் சரிபார்த்துக் கொண்டே இருங்கள்.. உங்கள் சுகர் லெவல் மட்டுப்படத் துவங்கிய பின், மருத்துவ ஆலோசனை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்..



இன்னும் வெந்தயத்தைப் பற்றி நிறைய சொல்ல இருக்கு.. அதையெல்லாம் அடுத்த எபியில் சொல்லறேன் பிள்ளைங்களா…




இனி செவ்வாய் அன்று உங்களை மீண்டும் சந்திக்கிறேன்..



மறக்காமல் ஒரு லைக்கோ, கமெண்ட்சோ போடுங்கப்பா…

 
Status
Not open for further replies.
Top